sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை: வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

/

எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை: வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை: வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை: வரி விதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப்

8


ADDED : ஏப் 07, 2025 07:30 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 07:30 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ''சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.



அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். நிதி பற்றாக்குறையை சரி செய்ய வரி விதிப்பதே ஒரே வழி என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.



இது குறித்து சமூகவலைதளத்தில், அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்க ஒரே வழி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது மட்டுமே.

அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இவற்றை ஒரு அழகான விஷயமாக கருதுகிறேன். தூங்கும் ஜோ பைடனின் அதிபர் பதவி காலத்தில், அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் அதை மாற்றப் போகிறோம். விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரிகள் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us