sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

/

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

2


ADDED : நவ 21, 2025 06:51 AM

Google News

2

ADDED : நவ 21, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது. தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார். இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை.

தென் ஆப்ரிக்காவுக்கான அமெரிக்க தூதர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்பார். தென் ஆப்ரிக்காவின் அதிபர் என்ன பொய்களை கூறினாலும், அதிகாரபூர்வ கூட்டங்களில் அமெரிக்கா பங்கேற்காது. இவ்வாறு கரோலின் லீவிட் தெரிவித்தார். ஏற்கனவே, ''தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்'' என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us