sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் கோர விபத்து; தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

/

அமெரிக்காவில் கோர விபத்து; தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கோர விபத்து; தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கோர விபத்து; தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

7


UPDATED : செப் 04, 2024 12:16 PM

ADDED : செப் 04, 2024 12:06 PM

Google News

UPDATED : செப் 04, 2024 12:16 PM ADDED : செப் 04, 2024 12:06 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெக்சாஸ்: அமெரிக்காவில் நிகழ்ந்த கோரமான கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

காரில் பயணம்


இதுபற்றிய விவரம் வருமாறு; டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அர்கான்சாஸ் நோக்கி கார் ஒன்றில் தர்ஷினி வாசுதேவன், ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகிய 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் தர்ஷினி வாசுதேவன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

காரில் மோதல்


காலின்ஸ் கவுண்டி என்ற பகுதியில் அவர்கள் பயணித்த கார் வந்து கொண்டிருந்த போது அசுர வேகத்தில் வந்த லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் 4 பேரும் இருந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அப்போது அடுத்தடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த 4 வாகனங்கள் கார் மீது மோத, தீப்பிடித்தது. மளமளவென கார் முழுவதும் தீ பரவியதால் உள்ளே 4 பேரும் சிக்கிக் கொண்டனர்..

உடல்கருகி பலி


வெளியே வர எவ்வளவோ முயற்சித்தும் முடியாததால் உள்ளேயே மூச்சுத் திணறி 4 பேரும் பலியாகினர். போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். காரில் இருந்த 4 பேரும் ஒருவரை ஒருவர் முன்பின் அறியாதவர்கள் என்பது தெரிய வந்தது.

வாடகை கார்



4 பேரும் மொபைல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றபோது தான் கோர விபத்து நிகழ்ந்தது. செயலி மூலம் மேலும் பல தரவுகளை சேகரிக்கும்போது தான், பிரிஸ்கோ பகுதியில் தங்கியிருந்தபடி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தர்ஷினி வாசுதேவன் உயர்கல்வி பயின்று வந்ததும், உறவினர் ஒருவரைக் காண காரில் சென்றதும் தெரிய வந்தது.

மரபணு சோதனை


இதேபோன்று தான், லோகேஷ் பலசார்லா மனைவியைச் சந்திக்க பென்டன்விலுக்கும், ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டெல்லாசில் உள்ள தமது உறவினரை பார்த்துவிட்டு நண்பர் ஷேக் என்பவருடன் திரும்பிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், மரபணு சோதனை முடிவுகள் படி அடையாளம் காணப்பட்டு உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us