நியூயார்க் அலுவலக கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை
நியூயார்க் அலுவலக கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை
UPDATED : ஜூலை 29, 2025 08:42 AM
ADDED : ஜூலை 29, 2025 07:26 AM

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளி தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள மிட் டவுன் மன்ஹாட்டனின் அலுவலகம் கட்டடம் உள்ளது. 634 அடி உயரமுள்ள இந்த வானளாவிய கட்டடத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மிட் டவுன் மன்ஹாட்டனில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் நியூயார்க் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். 27 வயதான சந்தேக நபர் ஷேன் தமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

