sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

40 அடி எழும்பிய அலைகள்; உல்லாசக்கப்பலில் சென்ற பயணிகள் பீதி!

/

40 அடி எழும்பிய அலைகள்; உல்லாசக்கப்பலில் சென்ற பயணிகள் பீதி!

40 அடி எழும்பிய அலைகள்; உல்லாசக்கப்பலில் சென்ற பயணிகள் பீதி!

40 அடி எழும்பிய அலைகள்; உல்லாசக்கப்பலில் சென்ற பயணிகள் பீதி!


ADDED : ஏப் 03, 2025 05:25 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அன்டார்டிகா மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர்.

அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும்.

இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, ​​மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர்.

அவர்கள் எடுத்த வீடியோவில், கப்பலின் பிரமாண்டமான ஜன்னல்கள் வழியாகத் தெரியும் உயரமான அலைகள் மற்றும் ஆச்சர்மடைய வைக்கும் கப்பல் அசைவு, ஆகியவற்றை பார்த்து பயணிகள் பீதியடைகின்றனர். இதன் வீடியோ வைரலானது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லெஸ்லி ஆன் மர்பி கூறுகையில், 'இந்த பயங்கரமான தருணம், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் தெற்கு பெருங்கடல்களின் சங்கமத்தின் காரணமாக கடல் பயங்கர அலைகளுடன் கொந்தளிக்கிறது.

இது ஒரு 48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம். இந்த அனுபவம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும், பாதுகாப்பான பயணமாகத்தான் இருந்தது.

வாழ்நாளின் இந்த பயணத்திற்கு 1000 சதவீதம் மதிப்புக்குரியது என்றார்.






      Dinamalar
      Follow us