sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

/

4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

3


UPDATED : நவ 06, 2025 09:22 PM

ADDED : நவ 06, 2025 05:30 PM

Google News

3

UPDATED : நவ 06, 2025 09:22 PM ADDED : நவ 06, 2025 05:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்ராரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் இருந்தது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர். அபிஷே க் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அக்ஷர் பட்டேல் ஒரளவு விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

168 ரன்கள் இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் மார்ஷ், மேத்தீவ் சார்ட், நன்கு துவக்கம் தந்தனர்.பின்னர், துபே வீசிய பந்தில் மிச்சல் மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, மேத்தீவ் சாரட் 25 ரன்களில் அக்ஷர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 3, அக்ஷர் பட்டேல்,ஷிவம் துபே, தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி, 48 ரன்களில் வெற்றி பெற்றது. தொடரில் இந்திய அணி, 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.






      Dinamalar
      Follow us