sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தோனேஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் 54 பேர் காயம்

/

இந்தோனேஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் 54 பேர் காயம்

இந்தோனேஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் 54 பேர் காயம்

இந்தோனேஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் 54 பேர் காயம்

4


ADDED : நவ 08, 2025 12:18 AM

Google News

4

ADDED : நவ 08, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகார்தா: இந்தோனேஷியாவில், பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் என, 54 பேர் காயமடைந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், வடக்கு ஜகார்தாவின் கெலாபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில், நேற்று மதியம் தொழுகைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கூடியிருந்தனர்.

அப்போது, மசூதியில் உள்ள, 'ஸ்பீக்கர்' அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், 54 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல், வெடி தயாரிக்க பயன்படும் பொருட்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்டதால், இந்த செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த மாணவர் தனியாக செயல்பட்டாரா அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us