sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

/

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

1


UPDATED : ஜூலை 17, 2025 08:41 AM

ADDED : ஜூலை 17, 2025 08:39 AM

Google News

1

UPDATED : ஜூலை 17, 2025 08:41 AM ADDED : ஜூலை 17, 2025 08:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

அலாஸ்காவில் உள்ள போபோப் தீவில் உள்ள சாண்ட் பாயிண்ட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கடலோர அஸ்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மிக்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

இந்த அளவிலான 10 முதல் 15 நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி உள்ளன. அலாஸ்காவில் குடியிருப்பாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு உள்ளது. அதில் கட்டடங்கள் குலுங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us