ADDED : டிச 29, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரமரிபோ: தென் அமெரிக்க நாடான சூரினாம் நாட்டில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆவேசமடைந்த நபர் ஒருவர், ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைநகரான பாரமரிபோவின் புறநகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு வந்த போலீசாரையும் அவர் தாக்க முயற்சித்தார்.
அப்போது பதிலுக்கு போலீசார் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மேல் விசாரணை நடக்கிறது.

