sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!

/

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!

9


ADDED : அக் 10, 2024 04:52 PM

Google News

ADDED : அக் 10, 2024 04:52 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாவோஸ்: இந்தியா - ஆசியான் அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டாக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது,'' என்றார்.

வியட்நாமின் லாவோஸ் நகரில் நடக்கும் ஆசியான்- இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை உள்ளது. புருனேவிற்கும் விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு தைமூரில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டு உள்ளது. மக்களை மையமாக கொண்ட நடைமுறையே வளர்ச்சிக்கான அடிப்படை ஆகும். நாலந்தா பல்கலையின் 'ஸ்காலர்ஷிப்' திட்டம் மூலம் ஆசியான் நாடுகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்து உளளனர். கோவிட் பெருந்தொற்று ஆகட்டும், இயற்கை பேரிடர் ஆகட்டும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகிறோம். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி ஆகியன ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதற்கு இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டு உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் கிழக்கு நோக்கிய இந்தியாவின் கொள்கை காரணமாக இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு புது ஆற்றல், திசை கிடைத்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1300 கோடி டாலர் ஆக அதிகரித்து உள்ளது.

அமைதியை விரும்பும் நாம் ஒருவருக்கு ஒருவர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதித்து வருகிறோம். நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.21ம் நூற்றாண்டானது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என்று நம்புகிறேன். இன்று உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலை இருக்கும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us