sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

/

வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு முறை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

8


ADDED : ஜூலை 21, 2024 02:53 PM

Google News

ADDED : ஜூலை 21, 2024 02:53 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாகா: வங்கதேசத்தில் 30 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று, வங்கதேசம் தனி நாடானது. போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. கடந்த 2018ல் நடந்த மாணவர் போராட்டத்தை தொடர்ந்து இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மாதம் கீழமை நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இதில், ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 133 பேர் உயிரிழந்தனர்.

இந்த இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் உத்தரவு செல்லாது எனக்கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தியது.






      Dinamalar
      Follow us