sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கார் பந்தய சீசனில் நடிக்கப் போவதில்லை: நடிகர் அஜித்குமார்

/

கார் பந்தய சீசனில் நடிக்கப் போவதில்லை: நடிகர் அஜித்குமார்

கார் பந்தய சீசனில் நடிக்கப் போவதில்லை: நடிகர் அஜித்குமார்

கார் பந்தய சீசனில் நடிக்கப் போவதில்லை: நடிகர் அஜித்குமார்

5


UPDATED : ஜன 10, 2025 07:25 PM

ADDED : ஜன 10, 2025 05:42 PM

Google News

UPDATED : ஜன 10, 2025 07:25 PM ADDED : ஜன 10, 2025 05:42 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: '' 18 வயது முதல் பைக் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறேன். பைக் ரேஸ் முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை,'' என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெறும், '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டிகளில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார். போட்டிக்கு முன் நடந்த கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி, அருகே இருந்த தடுப்புகள் மீது மோதி சுற்றி சுழன்று நின்றது. இதில், காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. எனினும், அந்த காரில் இருந்த அஜித் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 18 வயது முதல் பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறேன். சினிமாவில் பணியாற்றியதால் சில காலம் பங்கேற்க முடியவில்லை. 2002ம் ஆண்டு 32 வயதாகும் போது மீண்டும் மோட்டார் ரேஸிங்கில் ஈடுபட்டேன். கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டேன். இந்தியாவில் நடந்த ரேஸிங்கில் பங்கேற்றேன்.

2003ல் பார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதுடன் அந்த ஆண்டு முழுதும் நடந்த தொடர்களில் பங்கேற்றேன். 2004 ல் பிரிட்டிஷ் பார்முலா 3 ரேஸிங்கில் 'ஸ்காலர்ஷிப்' பிரிவில் பங்கேற்றாலும், துரதிருஷ்டவசமாக பணிச்சூழல் காரணமாக அதனை முழுமையாக முடிக்க முடியவில்லை.இதனால் சில காலம் காத்திருந்தேன். 2010 ல் ஐரோப்பிய பார்முலா 2 சீசனில் பங்கேற்றாலும், சினிமா காரணமாக சில ரேஸில் மட்டும் பங்கேற்க முடிந்தது.

தற்போது மீண்டும் இத்துறையில் ஈடுபட விரும்புகிறேன். ஒரு வீரராக மட்டுமின்றி அணியின் உரிமையாளராக சாதிக்க விரும்புகிறேன். கார் பந்தய சீசன் ஆரம்பிக்கும் வரை, நான் எந்த படங்களிலும் புதிதாக ஒப்பந்தம் செய்ய மாட்டேன். அக்., முதல் மார்ச் வரை, நான் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அஜித் குமார் கூறினார்.






      Dinamalar
      Follow us