sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 எரிமலை சீற்றம் தணிந்தாலும் விமான சேவை பாதிப்பு

/

 எரிமலை சீற்றம் தணிந்தாலும் விமான சேவை பாதிப்பு

 எரிமலை சீற்றம் தணிந்தாலும் விமான சேவை பாதிப்பு

 எரிமலை சீற்றம் தணிந்தாலும் விமான சேவை பாதிப்பு


ADDED : நவ 27, 2025 12:22 AM

Google News

ADDED : நவ 27, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிஸ் அபபா: எத்தியோப்பியாவின் ஹைலி குப்பி எரிமலையின் சீற்றம் தணிந்த போதிலும், அதன் சாம்பல் புகை மண்டலம் வான் பரப்பை சூழ்ந்திருப்பதால், சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் பகுதியில் உள்ள ஹைலி குப்பி எரிமலை, 12,000 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக கடந்த 23ம் தேதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், எரிமலையில் இருந்து 14 கி.மீ., உயரத்துக்கு சாம்பல் புகை மண்டலம் வெளியேறியது. அந்த புகை மண்டலம், செங்கடல் வழியாக ஏமன், ஓமன், வடக்கு பாகிஸ்தானை கடந்து, இந்திய வான் பரப்பையும் ஆக்கிரமித்தது.

இதனால், கடந்த இரு நாட்களில், இந்தியாவில் இருந்து பல சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மூன்று நாட்களை கடந்தும் எரிமலை சீற்றம் தொடர்ந்தாலும், தற்போது சற்று தணிந்துள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துவங்கியுள்ளன. இருப்பினும், காற்று பலமாக வீசியதால், செங்கடல் மற்றும் அரபு தீபகற்பங்களின் வான் பரப்பில் சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us