'இம்ரானை ரிலீஸ் செய்யுங்க': இந்தியா - பாக்., போட்டியின்போது பறந்த விமானத்தால் பரபரப்பு
'இம்ரானை ரிலீஸ் செய்யுங்க': இந்தியா - பாக்., போட்டியின்போது பறந்த விமானத்தால் பரபரப்பு
ADDED : ஜூன் 10, 2024 10:50 AM

நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின்போது 'இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள்' என்ற வாசகத்துடன் மைதானத்தின் மேலே விமானம் பறந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று (ஜூன் 9) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரம எதிரிகளாக கருதப்படும் இந்த இரு அணிகளின் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
போட்டியின் துவக்கத்தில் இரு நாட்டு தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டபோது திடீரென மைதானத்தின் மேலே பறந்த சிறிய ரக விமானம் 'இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் பறந்தது. இதனை போட்டியை காண வந்த ரசிகர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.