sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜெய்ஸ்வால் சதம் விளாசல்; கில், கருண் நாயர் ஏமாற்றம்

/

ஜெய்ஸ்வால் சதம் விளாசல்; கில், கருண் நாயர் ஏமாற்றம்

ஜெய்ஸ்வால் சதம் விளாசல்; கில், கருண் நாயர் ஏமாற்றம்

ஜெய்ஸ்வால் சதம் விளாசல்; கில், கருண் நாயர் ஏமாற்றம்

1


UPDATED : ஆக 02, 2025 07:53 PM

ADDED : ஆக 02, 2025 05:31 PM

Google News

UPDATED : ஆக 02, 2025 07:53 PM ADDED : ஆக 02, 2025 05:31 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். அதேவேளையில், கேப்டன் கில் மற்றும் கருண் நாயர் ஏமாற்றம் அளித்தனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் குவித்தன.

நேற்று 2ம் ஆட்டத்தில் 23 ரன்கள் பின்னிலையில் 2வது இன்னிங்சை இந்திய அணி நேற்று தொடங்கியது. கே.எல்.ராகுல் (7), சாய் சுதர்சன் (11) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதனால், நேற்று நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் (51), ஆகாஷ் தீப் (4) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ஆகாஷ் தீப், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் சேர்ந்து 100 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஆகாஷ் தீப் 66 ரன்களில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி விளையாடி வருகிறது.

உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கில் (11), கருண் நாயர் (17) ஏமாற்றம் அளித்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

ஓவலில் ரோகித்

இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா, ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தார்.






      Dinamalar
      Follow us