அமெரிக்காவின் பொற்காலம் துவங்கியுள்ளது: டிரம்ப் பேச்சு
அமெரிக்காவின் பொற்காலம் துவங்கியுள்ளது: டிரம்ப் பேச்சு
UPDATED : ஜன 21, 2025 07:02 AM
ADDED : ஜன 20, 2025 11:05 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொற்காலம் துவங்கி விட்டது என அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்டு டிரம்ப் பேசுகையில் தெரிவித்தார்.
பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
* அமெரிக்காவின் பொற்காலம் துவங்கி விட்டது. இன்று முதல், நம் நாடு மீண்டும் செழித்து உலகம் முழுதும் மதிக்கப்படும்.
* அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்கவே, துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுளால் காப்பாற்றப்பட்டேன்.
* அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்.
* சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்
* ஆண் - பெண் என்ற இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்
* பனாமா
கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால்,
அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க
தேவையில்லை.
* மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்.
* துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.
* செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும். மெக்சிகோ வளைகுடா இனி, அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படும்.
* அமெரிக்க குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிக்கப்படும்.
* அமெரிக்காவில் பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
* சட்டத்துக்கு கட்டுப்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வளர்ந்து வரும் நாடாகவே அமெரிக்காவை கருதுகிறோம்; எல்லைகளை விரிவாக்குவோம்.
* ஜோ பைடன் அரசின் தவறான நிர்வாகத்தால் எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்தது. எனவே எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.
* இயற்கை
பேரிடர்களை தடுப்பதிலும், எல்லைப் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்ப்பதிலும் ஜோ
பைடன் அரசு தோல்வி அடைந்து விட்டது.
* கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக
ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும்
பணியில் அமர்த்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.