sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆயுதக்குழுவினர் தாக்குதல்: நைஜீரியாவில் 20 பேர் பலி

/

ஆயுதக்குழுவினர் தாக்குதல்: நைஜீரியாவில் 20 பேர் பலி

ஆயுதக்குழுவினர் தாக்குதல்: நைஜீரியாவில் 20 பேர் பலி

ஆயுதக்குழுவினர் தாக்குதல்: நைஜீரியாவில் 20 பேர் பலி


ADDED : ஜூலை 16, 2025 10:08 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள கிராமத்தில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.

நைஜீரியாவில் சமீபகாலமாக நீர் மற்றும் நிலம் தொடர்பாக, மேய்ச்சல்காரர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரியோம் கிராமப்பகுதியில் உள்ள தஹோசில் நேற்று அதிகாலையில், ஆயுதக்குழுவினர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் திவான் கேப்ரியல் கூறினார்.

இது தொடர்பாக உள்ளூர் அதிகாரி சதி ஷூவா கூறியதாவது:

சமீப காலமாக உள்ளூர் விவசாயிகள் மோதல் மிகவும் ஆபத்தானதாக மாறி உள்ளது. மேய்ச்சல்காரர்கள் அதிகளவில் ஆயுதங்களை எடுத்துவரும் நிலையில் அதிகாரிகளும், ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். இவ்வாறு எச்சரித்தும் நேற்று வடக்கு பகுதிகளில் ஆயுதக்குழுவினர் வீடுகளை எரித்தனர். அவர்கள் பாதுகாப்பு படையினருக்கு கட்டுப்படவில்லை. கடந்த மாதம், பெனு மாநிலத்தில் ஆயுதக்குழுவினர் குறைந்தது 150 பேரைக் கொன்றனர்.

ரியோம் கிராமப் பகுதியில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் ஆபத்தானதாகி, பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளன, அவை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு சதி ஷூவா கூறினார்.






      Dinamalar
      Follow us