sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென் ஆப்ரிக்காவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

/

தென் ஆப்ரிக்காவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் சோகம்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி


UPDATED : அக் 13, 2025 04:41 PM

ADDED : அக் 13, 2025 04:39 PM

Google News

UPDATED : அக் 13, 2025 04:41 PM ADDED : அக் 13, 2025 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்ஆப்ரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகர் அருகே நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் மலை பகுதிகளுக்கு அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், தலைகுப்புற பஸ் கவிழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர் ஆவர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us