ஸ்வீடனில் கூட்டத்தில் புகுந்தது பஸ்: 6 பேர் பரிதாப பலி
ஸ்வீடனில் கூட்டத்தில் புகுந்தது பஸ்: 6 பேர் பரிதாப பலி
ADDED : நவ 15, 2025 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த பஸ் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
பஸ்சில் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

