sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை

/

தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை

தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை

தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை

1


ADDED : ஜூலை 28, 2025 01:13 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 01:13 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் பரபரப்பான மார்க்கெட்டில் இன்று (ஜூலை 28) மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் வழக்கம் போல் பொருட்களை மக்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர், அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பாதுகாவலர்கள் நால்வரும், பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

மேலும் ஒருவர் பலத்த காயமுற்றார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு கொலையாளி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான மோதல்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us