இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
ADDED : மார் 02, 2026 04:06 PM

டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஈரானின் மதத்தலைவரும், ஆட்சியாளருமான கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலடி நிச்சயம் உண்டு என ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் எனவும் கூறியுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்குப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை(ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது. இதன் பிறகு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் அந்த படையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது 3வது நாளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக ஈரான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

