19 நாடுகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா பிரமாண்ட போர் பயிற்சி
19 நாடுகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா பிரமாண்ட போர் பயிற்சி
ADDED : ஜூலை 15, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரமாண்ட போர் பயிற்சியில், இந்தியா, அமெரிக்கா உட்பட, 19 நாடுகளைச் சேர்ந்த, 35,000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து, 'தாலிஸ்மான் சாப்ரே' என்ற பெயரில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆண்டு குயின்ஸ்லாந்து மாகாணத்தில், 4,500 சதுர கி.மீ., பரப்புள்ள பகுதியில் போர் பயிற்சி நடந்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டு, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேஷியா உட்பட, 19 நாடுகளைச் சேர்ந்த, 35,000 வீரர்கள், இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ள 'ஹிமார்ஸ்' எனப்படும் நீண்ட துாரத்துக்கு ஏவுகணைகளை ஏவும் வாகனத்தை ஆஸ்திரேலியா முதல் முறையாக பயன்படுத்தியுள்ளது.

