sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கும்; அறிவித்தார் முகமது யூனுஸ்

/

வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கும்; அறிவித்தார் முகமது யூனுஸ்

வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கும்; அறிவித்தார் முகமது யூனுஸ்

வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்கும்; அறிவித்தார் முகமது யூனுஸ்

1


ADDED : டிச 16, 2024 02:55 PM

Google News

ADDED : டிச 16, 2024 02:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: 'வங்கதேசத்தில் 2025ம் இறுதியில் அல்லது 2026ம் ஆண்டின் துவக்கத்தில் தேர்தல் நடைபெறும்' என முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.



ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், ஹிந்து கோவில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், டாக்காவில் நிருபர்கள் சந்திப்பில், முகமது யூனுஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் 2025ம் இறுதியில் அல்லது 2026ம் ஆண்டின் துவக்கத்தில் தேர்தல் நடைபெறும். அனைத்து முக்கிய சீர்திருத்தங்களையும் முடித்த பின்னர் தேர்தல் நடத்த வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளில் ஓட்டளிக்க தகுதி பெற்ற அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா, என்பதை உறுதி செய்யும் பணி நடக்கிறது. முன்பே தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒப்புக் கொண்டால் 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தப்படும். மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்திற்கு பிறகு தற்போது எழுச்சி பெற்றுள்ளனர். அவர்கள் எந்த தவறும் செய்ய இடமில்லை. நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் அனைவரும் ஓட்டளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us