sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆப்பிள் மொபைல் போன்களுக்கு தடை: எலான் மஸ்க் மிரட்டல்

/

ஆப்பிள் மொபைல் போன்களுக்கு தடை: எலான் மஸ்க் மிரட்டல்

ஆப்பிள் மொபைல் போன்களுக்கு தடை: எலான் மஸ்க் மிரட்டல்

ஆப்பிள் மொபைல் போன்களுக்கு தடை: எலான் மஸ்க் மிரட்டல்

3


ADDED : ஜூன் 11, 2024 11:28 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:28 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தனது நிறுவனங்களில் ‛ ஆப்பிள்' மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப் போவதாக டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதள நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்கள் மற்றும் செயலிகளில் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாக அதிகாரியும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஓபன் ஏஐ -ன் தொழில்நுட்பத்தை ஆப்பிள், தனது சாதனங்களில் இணைத்தால், எனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல். நிறுவனங்களுக்கு வருபவர்கள், தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலில் இருக்கும் கூண்டில் வைத்துவிட்டு வர வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us