பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் வாங்குகிறது வங்கதேசம்
பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் வாங்குகிறது வங்கதேசம்
UPDATED : ஜன 08, 2026 01:34 AM
ADDED : ஜன 08, 2026 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானிடமிருந்து மற்றொரு அண்டை நாடான வங்கதேசம் ஜே.எப்., 17 ரக போர் விமானங்கள் வாங்க முடிவு செய்துள்ளது.
பாக்., விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், வங்கதேச விமானப்படை தளபதி மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு குழுவினர் பங்கேற்றனர்.
இதில், ஜே.எப்., 17 தண்டர் போர் விமானங்களை கொள்முதல் செய்வது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் கராச்சி மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா இடையே நேரடி விமான சேவை, வரும் 29- முதல் மீண்டும் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

