sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி

/

வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி

வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி

வங்கதேச ஹிந்து துறவி,ஜாமின் மனு தள்ளுபடி

5


ADDED : டிச 11, 2024 08:29 PM

Google News

ADDED : டிச 11, 2024 08:29 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனு, கடந்த மாதம் 26ல் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் சாட்டோகிராம் நீதிமன்றத்தில் இன்று ( டிச.,12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி சைய்புல் இஸ்லாம் மறுத்து ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கின் அடுத்த விசாரணையை 2025 ஜன. 02 தேதிக்கு ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us