மக்களை கண்டு அஞ்சும் ஈரான் அரசு; வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல் பிரதமர்!
மக்களை கண்டு அஞ்சும் ஈரான் அரசு; வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல் பிரதமர்!
ADDED : நவ 13, 2024 07:28 AM

ஜெருசலேம்: 'மக்களை கண்டு, ஈரான் அரசு அஞ்சி நடுங்குகிறது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேல் மோதல் நடக்கிறது. மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மக்களுக்கு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: ஈரானின் கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் ஒன்று இருக்கிறது. அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால் தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள்.
நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இஸ்ரேல், ஈரானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ சர்வதேச அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.