தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்; மியான்மரில் பலி எண்ணிக்கை 3,145ஆக உயர்வு
தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்; மியான்மரில் பலி எண்ணிக்கை 3,145ஆக உயர்வு
ADDED : ஏப் 04, 2025 09:28 AM

பாங்காக்: மியான்மரில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து போயின. வானுயர கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து தலைநகரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மவுங் மவுங் ஓன் கூறுகையில், '4,589 மக்கள் காயமடைந்துள்ளனர். 221 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்க மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார் தொண்டு செய்து வருகின்றன,' இவ்வாறு அவர் கூறினார்.