sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி

/

போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி

போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி

போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி


ADDED : நவ 05, 2025 04:25 PM

Google News

ADDED : நவ 05, 2025 04:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெர்ஸகோவினா (போஸ்னியா): ஐரோப்பிய நாடான போஸ்னியாவில், முதியோர் இல்லத்தில் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

வடக்கு போஸ்னியா நகரம் துஸ்லா. இங்கு முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இந்த இல்லத்தின் 7வது தளத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.

மளமளவென தீ. மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. அங்கே இருந்தவர்கள் வயது முதிர்வு காரணமாக வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மீட்பு பணியில் இறங்கினர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எதனால் தீப்பிடித்தது என்பது பற்றிய காரணம் தெரியவில்லை இருப்பினும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி உள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த அந்நாட்டு பிரதமர் நெர்மின் நிக்சிக், இது மிக பெரிய ஒரு பேரழிவு என்று வேதனை தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us