sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

/

கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

கப்பலை காப்பாற்ற துணிச்சலான செயல்பாடு: இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது!

11


ADDED : டிச 03, 2024 09:09 PM

Google News

ADDED : டிச 03, 2024 09:09 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ.,) சார்பில் வழங்கப்பட்ட, அசாதாரண துணிச்சலுக்கான விருதை, இந்திய கேப்டன் அவிலாஷ் ராவத் பெற்றுக் கொண்டார்.

நேற்று மாலை லண்டனில் உள்ள ஐ.எம்.ஓ., தலைமையகத்தில் இந்த விருது வழங்கப்பட்டது.

மர்லின் லுவாண்டா என்ற வணிக கப்பலின் கேப்டனாக அவிலாஷ் ராவத் பணியாற்றி வந்தார்.இந்த கப்பல், ஜனவரி மாதம் 84 ஆயிரம் டன் நாப்தா பாரம் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக சென்றபோது, பயங்கரவாதிகளால் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலின் சரக்கு இருப்பு பகுதியில் தீப்பற்றிக் கொண்டது.

தீயை அணைக்கவும், கப்பலை காப்பாற்றவும், அவிலாஷ் ராவத் தலைமையிலான கப்பல் பணியாளர்கள், நான்கரை மணி நேரம் கடலில் போராடினர். அதன்பிறகே, அவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் கடற்படை கப்பல் உதவி கிடைத்தது.

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், கப்பலை காப்பாற்ற போராடிய குழுவினரை கவுரவிக்கும் நோக்கில் இந்த விருது அவிலாஷ் ராவத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த கப்பலின் பாதுகாப்புக்காக விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் குழுவின் கேப்டன் பிரிஜேஷ் நம்பியார் உள்ளிட்டோருக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அவிலாஷ் ராவத், ஆபத்தில் உதவிய இந்தியா, பிரான்ஸ், அமெரிக்க கடற்படைகளுக்கு நன்றி தெரிவித்தார். செங்கடல் வழியாக கப்பல் அனுப்புவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.






      Dinamalar
      Follow us