sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சட்டத்தை மீறினால்… : சட்டவிரோத அகதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

/

சட்டத்தை மீறினால்… : சட்டவிரோத அகதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சட்டத்தை மீறினால்… : சட்டவிரோத அகதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சட்டத்தை மீறினால்… : சட்டவிரோத அகதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


ADDED : டிச 31, 2025 10:55 PM

Google News

ADDED : டிச 31, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்கள் மீது கிரிமினல் அபராதம் விதிக்கப்படும் என நமது நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவ்வாறு வந்தவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இத்துடன், எச்1பி விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. விசா பெறுவதற்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சட்டத்தை மீறினால், மிகக்கடுமையான கிரிமினல் அபராதத்துடன் தண்டிக்கப்படுவீர்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்கவும், நாட்டின் எல்லை மற்றும் குடிமக்களை பாதுகாக்கவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us