sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை; இருவர் கைது

/

கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை; இருவர் கைது

கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை; இருவர் கைது

கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை; இருவர் கைது

6


UPDATED : டிச 09, 2024 12:23 PM

ADDED : டிச 09, 2024 08:00 AM

Google News

UPDATED : டிச 09, 2024 12:23 PM ADDED : டிச 09, 2024 08:00 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: 'கனடா நாட்டின் எட்மான்டன் நகரில், 20 வயது இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்க நாடான கனடாவில், எட்மான்டன் நகரில், இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் வசித்து வந்தார். இவருக்கு வயது 20. இவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்தனர். இது தொடர்பாக, கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மாணவர் உயிரிழப்புக்கு, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 6ம் தேதி எட்மண்டனில் இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். துயரத்தில் இருக்கும் மாணவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த கனடா போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது. ஏற்கனவே, காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us