sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு

/

கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு

கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு

கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு

12


UPDATED : அக் 17, 2024 07:18 AM

ADDED : அக் 17, 2024 03:14 AM

Google News

UPDATED : அக் 17, 2024 07:18 AM ADDED : அக் 17, 2024 03:14 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இங்குள்ள காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்படுவதாகவும் கனடாவின் உளவுத்துறை இயக்குனர் வனீசா லாயட் பேசியது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கனடாவில் வசித்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது, இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக, கனடா கடந்த ஓராண்டாகவே குற்றஞ்சாட்டி வருகிறது.

இதற்கிடையே, லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற சமூக விரோத கும்பல்களின் உதவியுடன், கனடாவில் வன்முறைகளை இந்தியா கட்டவிழ்த்து விடுவதாகவும், பல கொலைகளை அரங்கேற்றி வருவதாகவும், கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி சமீபத்தில் தெரிவித்தார்.

இது, இருநாட்டு உறவை மேலும் சீர்குலைத்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றியதுடன், கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மாவை நம் அரசு திரும்பப் பெற்றது.

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆறு இந்திய ஏஜென்ட்களை கனடாவில் இருந்து வெளியேறும்படி அந்நாடு உத்தரவிட்டது; அவர்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழையவும் தடை விதித்தது.

இதற்கிடையே, கனடாவின் உளவு அமைப்பான கனடா செக்யூரிட்டி இன்டெலிஜென்ஸ் சர்வீசின் இயக்குனர் வனீசா லாயிட் கடந்த மாதம் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம்:

கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மதிப்பை குறைக்கும் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள காலிஸ்தானியர்களுக்கு அவர்கள் நேரடியாக ஆதரவு அளிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நேரத்தில், வனீசாவின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியா மீது அமெரிக்கா புகார்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர் கூறியதாவது:கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவற்றை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை செய்ய மறுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.பிரிட்டனைச் சேர்ந்த, எப்.சி.டி.ஓ., எனப்படும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கனடா அரசின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கனடாவின் நீதித்துறையின் மீது பிரிட்டனுக்கு முழு நம்பிக்கை உள்ளது.இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிப்பது அவசியம். கனடாவின் சட்ட நடவடிக்கைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதே, இந்த விவகாரத்தில் அடுத்த நல்ல முடிவாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில், ''கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அது மிக கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்,'' என்றார். ஆஸ்திரேலிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'கனடாவின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்' என்றார்.








      Dinamalar
      Follow us