sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 30, 2025 ,கார்த்திகை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்? கனடா மக்கள் சொல்வது என்ன?

/

இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்? கனடா மக்கள் சொல்வது என்ன?

இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்? கனடா மக்கள் சொல்வது என்ன?

இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்? கனடா மக்கள் சொல்வது என்ன?

19


ADDED : டிச 05, 2024 07:46 PM

Google News

ADDED : டிச 05, 2024 07:46 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: இந்தியா உடனான உறவை, ஜஸ்டின் ட்ரூடோ அரசு சரியாக பேணவில்லை என கனடா மக்கள் 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய துாதரக அதிகாரிகளை அந்நாடு கண்காணித்தது. இதன் காரணமாக, அந்நாட்டிற்கான இந்திய தூதரை மத்திய அரசு திரும்பப் பெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாட்டு உறவு பின்னடைவை சந்தித்து உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக 'அங்கஸ் ரீட் நிறுவனம்(Angus Reid Institute)' மற்றும் கனடாவின் ஆசிய பசுபிக் பவுண்டேசன் அமைப்பு இணைந்து கனடா மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது;இந்தியா உடனான உறவை கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசு சரியாக பேணவில்லை என நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு ஆதரவாக 39 சதவீதம் பேரும், எதிராக 32 சதவீதம் பேரும், 29 சதவீதம் பேர் உறுதியாக கூற முடியாது என பதிலளித்து உள்ளனர்.

அதேபோல் 39 சதவீதம் பேர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஆக இருக்கும் வரை இரு நாட்டு உறவு மேம்படாது எனவும், 34 சதவீதம் பேர் இந்தியப் பிரதமர் ஆக மோடி இருக்கும் வரை உறவு மேம்படாது எனவும் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us