sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்ல சதி; 'ரா' முன்னாள் அதிகாரி மீது வழக்கு பதிவு

/

குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்ல சதி; 'ரா' முன்னாள் அதிகாரி மீது வழக்கு பதிவு

குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்ல சதி; 'ரா' முன்னாள் அதிகாரி மீது வழக்கு பதிவு

குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்ல சதி; 'ரா' முன்னாள் அதிகாரி மீது வழக்கு பதிவு

22


ADDED : அக் 19, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 19, 2024 07:21 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, இந்திய உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, 'சீக்கியருக்கான நீதி' என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக, காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுான் உள்ளார். அமெரிக்காவில் வைத்து இவரை கொலை செய்ய, இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியது. இதை நம் நாடு திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியர் நிகில் குப்தா என்பவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். பின் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, 'ரா' எனப்படும், நம் நாட்டின் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ், 39, மீது அமெரிக்க அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. கூலிப்படையை ஏவுதல், பண மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னுானை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் விகாஷ் யாதவ் இருந்தார் என்றும், இந்த கொலையை செயல்படுத்த, நிகில் குப்தா என்பவரை அவர் நியமித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்த மத்திய அரசு, விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ட்ரூடோவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான, கனடா மக்கள் கட்சியின் தலைவர் மாக்சிம் பெர்னியர் கூறியதாவது:ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜன்ட்டுகளுக்கு தொடர்பு இருந்தால், அது மிகவும் தீவிரமானவை; உரிய முறையில் கையாளப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.இந்த கொலை வழக்கை வைத்து கொண்டு, நாட்டின் மற்ற பிரச்னைகளில் இருந்து மக்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திசை திருப்பி வருகிறார். நிஜ்ஜார் ஒரு வெளிநாட்டு பயங்கரவாதி. கனடாவில் தஞ்சம் கோருவதற்காக அவர் பல முறை மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us