sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா

/

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா

10


ADDED : ஏப் 13, 2025 05:35 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:35 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலம், வரும் ஜூனில் திறக்கப்பட உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், கிராமப்புறங்களை இணைப்பதற்காக நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன.

தற்போது, உலகின் மிக உயரமான பாலமாக 1,854 அடி உயர ட்யுஜ் பாலம் இருக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தில், பெய்பென் ஆற்றின் துணை நதியான நிஸு ஆற்றின் மீது இந்த பாலம் அமைந்துள்ளது.

இந்நிலையில், இதை விட மிக அதிக உயரமாக 2,051 அடி உயரத்தில், பெய்பென் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது.

குய்ஸுவு மாகாணத்தில் பெய்பென் ஆற்றின் மீது, இரண்டு மிகப்பெரிய பள்ளத்தாக்குகளை இணைக்கும் விதமாக இந்த பாலம் அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் கோபுரத்தின் உயரம் 1,082 அடி. ஆனால் இந்த பாலத்தின் உயரம் 2,051 அடி. வரும் ஜூன் மாதம் இந்த பாலம் திறக்கப்படுகிறது.

'ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்' என அழைக்கப்படும் இந்த பிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு துாண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அளவு எக்கு துாண்களைக் கொண்டு மூன்று ஈபிள் கோபுரங்களை கட்டி விடலாம். இரண்டு பள்ளத்தாக்குகளை இணைக்கும் வகையில், 3.21 கி.மீ., நீளத்துக்கு அமைந்துள்ள இந்த பாலத்தை அமைப்பதற்கு, மொத்தம் 2,200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த பாலம், குய்ஸுவு மாகாணத்தில் பெய்பென் நதிக்கரையோர கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், சீனாவின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இந்த பாலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us