sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாதுகாப்பில் ஒத்துழைப்பு இலங்கைக்கு சீன அதிபர் உறுதி

/

பாதுகாப்பில் ஒத்துழைப்பு இலங்கைக்கு சீன அதிபர் உறுதி

பாதுகாப்பில் ஒத்துழைப்பு இலங்கைக்கு சீன அதிபர் உறுதி

பாதுகாப்பில் ஒத்துழைப்பு இலங்கைக்கு சீன அதிபர் உறுதி


ADDED : அக் 15, 2025 02:05 AM

Google News

ADDED : அக் 15, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்,:சீன அதிபர் ஷீ ஜின்பிங், இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா, பாதுகாப்பு உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர்.

நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரியா, சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் குறித்த உலக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சென்றார்.

அந்நாட்டு பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்த அவர், நேற்று அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது, துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக இருப்பதாக ஜின்பிங் கூறினார்.

மேலும் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எல்லை தாண்டிய சூதாட்டம், மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களை கடுமையாக ஒடுக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜின்பிங் - ஹரிணி அமரசூரியா இடையே நடந்த பேச்சில் இலங்கை துறைமுகங்களுக்கு வரும் சீன ஆராய்ச்சி கப்பல்கள் குறித்து எந்தவொரு விவாதமும் இடம்பெறவில்லை.

உளவு கப்பல்களாக கருதப்படும் இந்த கப்பல்கள் குறித்து இந்தியா இலங்கையிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us