குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த சீன ராக்கெட் பாகம்: அச்சத்தில் ஓடிய மக்கள்
குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த சீன ராக்கெட் பாகம்: அச்சத்தில் ஓடிய மக்கள்
UPDATED : ஜூன் 23, 2024 01:12 PM
ADDED : ஜூன் 23, 2024 12:34 PM

பெய்ஜிங்: சீனா ஏவிய ராக்கெட்டின் ஒரு பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்தது. இதனை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
நேற்று( ஜூன் 22) சீனாவும், பிரான்சும் இணைந்து லாங் மார்ச் 2சி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் ஆனது நைட்ரஜன் டெ்ரோக்சைட் மற்றும் அன்சிமெட்ரிகல் டைமெத்திலிஹைட்ரஜின் கலவையை எரிபொருளாக பயன்படுத்துகிறது. இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட, அதில் இருந்த பூஸ்டர் எனப்படும் கருவி பூமியை நோக்கி வந்தது. அது, மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. பிறகு அது வெடித்தது. இந்த கருவி பூமியை நோக்கி வருவதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராக்கெட் பாகம் பூமியில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ராக்கெட் திட்டம் வெற்றி அடைந்ததாக சீனா அறிவித்து உள்ளது.