sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 வைர வியாபாரி மெஹுல் சோக்சி நாடு கடத்தும் பணி துவங்கியது

/

 வைர வியாபாரி மெஹுல் சோக்சி நாடு கடத்தும் பணி துவங்கியது

 வைர வியாபாரி மெஹுல் சோக்சி நாடு கடத்தும் பணி துவங்கியது

 வைர வியாபாரி மெஹுல் சோக்சி நாடு கடத்தும் பணி துவங்கியது

2


ADDED : டிச 18, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரஸல்ஸ்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டு தப்பி பெல்ஜியமில் தஞ்சமடைந்துள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான பணிகள் நேற்று துவங்கின.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, தன் சகோதரர் மகன் நிரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கினார்.

கடந்த 2018-ல் இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. மெஹுல் சோக்சி கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பி ஓடினார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்த ஆண்டு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்துக்கு சென்றார்.

இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று பெல்ஜியம் போலீசார் அவரை ஏப்ரலில் கைது செய்தனர். அவரை நாடு கடத்த அக்டோபரில் பெல்ஜியம் உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதை எதிர்த்து மெஹுல் சோக்சி பெல்ஜியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டை கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை நாடு கடத்தும் பணிகள் நேற்று துவங்கின.






      Dinamalar
      Follow us