sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாத்திரம் கழுவும்; வீட்டை பெருக்கும்... எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு!

/

பாத்திரம் கழுவும்; வீட்டை பெருக்கும்... எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு!

பாத்திரம் கழுவும்; வீட்டை பெருக்கும்... எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு!

பாத்திரம் கழுவும்; வீட்டை பெருக்கும்... எடுபிடி வேலைக்கு ரோபோ வந்தாச்சு!

9


ADDED : அக் 12, 2024 04:02 PM

Google News

ADDED : அக் 12, 2024 04:02 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: வீட்டில் செய்யக்கூடிய அனைத்து எடுபிடி வேலைகளையும், பார்வையாளர்கள் முன்னிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் ரோபோ செய்து காட்டி அசத்தியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த வியாழன் அன்று, 'வீ ரோபாட் ' என்ற நிகழ்ச்சியை டெஸ்லா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை, வரவேற்ற ரோபோக்கள், நடனம் ஆடி வரவேற்றன. உணவு, டிரிங்க்ஸ் வழங்குவது என எல்லோருடனும் பழகி, பேசி செல்பி எடுத்து அசத்தியது.ரோபோக்களுக்கு ஆப்டிமஸ் ரோபோ என டெஸ்லா நிறுவனம் பெயரிட்டுள்ளது.

ஆப்டிமஸ் ரோபோக்களை அறிமுகம்செய்து, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறுகையில்,

'இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள், உங்களுக்கு தேவையான அடிப்படை செயல்கள், சேவைகளை வழங்கும்.

உங்களுக்கு ஓர் ஆசிரியராக, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது, வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது என உங்கள் நண்பன் போல சேவைகளை வழங்கும். வீட்டில் உள்ள அலமாரியில், அந்தந்த பொருட்களை அடுக்குவது, சமையலறை பாத்திரங்களை கழுவுவது, சுத்தம் செய்வது என நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ, அதை அந்த ரோபோக்கள் செய்து அசத்திவிடும்.

உங்களுடன் நன்றாக பேசி, நடந்து வரும். மதுபான கூடாரங்களில், பானங்களை வழங்கி சேவை செய்யும்.இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை, ரூ.17 லட்சத்திலிருந்து 26 லட்ச ரூபாய் வரை இருக்கும்.இவ்வாறு எலான் மஸ்க் கூறினார்.

ரோபோக்கள் குறித்து சிலர் கூறுகையில், இந்நிகழ்ச்சி, உண்மையிலேயே மறக்கமுடியாத வரலாற்று நிகழ்வாகும்.ரிமோட் மூலமாக இயங்கி பானங்களை வழங்கினாலும், இன்னும் எங்கள் மனதில் அழுத்தமாக பதிந்து ஆச்சர்யபடுத்தி விட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us