sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடா பிரதமர் பதவிக்கு மோதும் அனிதா இந்திரா யார் தெரியுமா; கோவை மக்களுக்கு மேலும் ஒரு பெருமை!

/

கனடா பிரதமர் பதவிக்கு மோதும் அனிதா இந்திரா யார் தெரியுமா; கோவை மக்களுக்கு மேலும் ஒரு பெருமை!

கனடா பிரதமர் பதவிக்கு மோதும் அனிதா இந்திரா யார் தெரியுமா; கோவை மக்களுக்கு மேலும் ஒரு பெருமை!

கனடா பிரதமர் பதவிக்கு மோதும் அனிதா இந்திரா யார் தெரியுமா; கோவை மக்களுக்கு மேலும் ஒரு பெருமை!

16


ADDED : ஜன 11, 2025 07:22 AM

Google News

ADDED : ஜன 11, 2025 07:22 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர் அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.

சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார். தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் ரேசில் இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

அந்த வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரா ஆர்யா களம் இறங்குகிறார். இன்னொருவரான அனிதா ஆனந்தும் பதவிக்கு மோதுகிறார். தமிழக தந்தை - பஞ்சாப் தாயாருக்கு பிறந்த அனிதா ஆனந்த், தாமும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். அனிதா இந்திரா கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர்.

வெளிநாடுகளில் புகழ் பெற்ற, இந்திய வம்சாவளியினர், ரிஷி சுனக் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு, அடுத்த இடத்தில், 57 வயதான அனிதா இந்திரா உள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய உடனேயே, இந்திய ஊடகங்களின் கவனம் அனிதா இந்திரா பக்கம் திரும்பியது. இவரது வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், நாளிதழ்கள் உட்பட அனைத்திலும் சிறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது.

அனிதா இந்திராவின் தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர். அனிதாவின் தந்தைவழி தாத்தா வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

அனிதாவைப் பொறுத்தவரை, அவர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றினார். அவர் 2019ம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, கோவிட் தொற்றுநோய் காலத்தில் கனடாவில் தடுப்பூசி கொள்முதல் உள்ளிட்டவற்றை அனிதா மேற்பார்வையிட்டார்.

அரசியலில் இறங்குவதற்கு முன், அனிதா, கார்ப்பரேட் நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அனிதா இந்திரா பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கனடாவில் தமிழர்கள் தமிழ் மாதத்தின் தொடக்கத்தை தைப் பொங்கலாகக் கொண்டாடுவார்கள்.

ஒரு கனடா நாட்டவர் என்ற முறையில், மகிழ்ச்சியான தைப் பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us