சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
ADDED : மே 16, 2025 08:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ஜிங்: சீனாவில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அண்மையில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை மேற்கு சீனாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் குறைந்த அளவிலான ஆபத்து கொண்ட பச்சை எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.