sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வெயிலில் வேகும் ஐரோப்பா: கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்த பரிதாபம்

/

வெயிலில் வேகும் ஐரோப்பா: கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்த பரிதாபம்

வெயிலில் வேகும் ஐரோப்பா: கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்த பரிதாபம்

வெயிலில் வேகும் ஐரோப்பா: கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்த பரிதாபம்

1


ADDED : ஆக 13, 2024 11:54 AM

Google News

ADDED : ஆக 13, 2024 11:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: ஐரோப்பா கண்டத்தில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக கடந்த ஆண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில், பெண்கள் அதிகம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் இதுவரை இல்லாத அளவு வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஸ்பெயினில் உள்ள உலக சுகாதாரத்திற்கான பார்சிலோனா அறிவியல் மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வானது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 35நாடுகளில் 823 பகுதிகளில் பதிவான வெப்ப அளவு, உயிரிழப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது.

தற்போது வெளியாகி உள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பருவநிலை பிரச்னை காரணமாக, ஐரோப்பா கண்டத்தில், இதுவரை இல்லாத அளவு வெப்ப அலை வீசுகிறது. வனப்பகுதிகள் பற்றி எரிகின்றன. இதனால், 2023ல் 47,690 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2022 ஐ காட்டிலும் குறைவு. உயிரிழந்தவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

அதிகபட்சமாக கிரீஸ் நாட்டில் உயிரிழப்பு விகிதம் 10 லட்சம் பேருக்கு 393 என்ற அளவில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பல்கேரியா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. ஜூலை மாதம் வீசிய வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் வசித்தவர்களில் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டர். ஜூலை மத்தி முதல் ஆகஸ்ட் பிற்பகுதி வரை வீசிய வெப்ப அலையில் தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.

2022 ல் வெப்ப அலை காரணமாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2023 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டதை விட அதிகம் இருக்கும். தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் குறைவாக உள்ளது. உண்மையில் 58 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இத்தாலி -12,743

ஸ்பெயின் -8,352

ஜெர்மனி-6,376

கிரீஸ்- 4,339

ருமேனியா -2,585

பிரிட்டன் -1,851

பல்கேரியா -1,670

போர்ச்சுகல்-1,432

போலந்து-616

உயிரிழந்தவர்களில் ஆண்களை விட பெண்கள்(55 சதவீதம்) பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் மொத்த எண்ணிக்கையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us