sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி

/

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி


ADDED : அக் 17, 2025 02:32 AM

Google News

ADDED : அக் 17, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டிவிடியோ: தென் அமெரிக்க நாடான உருகுவேயில், தீவிர நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் விருப்பப்படி கருணைக்கொலை செய்வதற்கான அனுமதி வழங்கவேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதன்படி, தலைநகர் மாண்டிவிடியோவில் உள்ள செனட் சபையில் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

கீழ்சபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. மேல்சபையில் மசோதாவை கொண்டு வந்தபோது, 31 எம்.பி.,க்களில் 20 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர்.

இந்த சட்டம், மருத்துவ நிபுணரால் மேற்கொள்ளப்படும் கருணைக் கொலையை அனுமதிக்கிறது. ஆனால், நோயாளி தானே மருந்து எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை அனுமதிக்கவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், இரண்டு மருத்துவர்கள் அவர்களின் மனநல தகுதியை உறுதிசெய்ய வேண்டும். பெல்ஜியம், கொலம்பியா, நெதர்லாந்து போல் அல்லாமல், உருகுவேயில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us