sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு

/

 கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு

 கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு

 கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு


ADDED : நவ 24, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லுப்லஜனா: ஸ்லோவேனியாவில் கருணை கொலை சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பொதுவாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த ஆண்டு, அந்நாட்டு பார்லிமென்டில் கருணைக் கொலை சட் டம் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பான்மையான எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால், கடந்த ஜூலை யில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் பழமைவாத குழுக்கள் உள்ளிட்டோர், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் 40,000க்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து இச்சட்டம் குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

அதன்படி, நேற்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவை பொறுத்து கருணை கொலை தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டம் இறுதி வடிவம் பெறும் என கூறப்படுகிறது.

ஸ்லோவேனியாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17 லட்சம். இதில் 20 சதவீதம் பேர் எதிராக வாக்களித்தால் கருணை கொலை சட்டம் ரத்து செய்யப்படும்.






      Dinamalar
      Follow us