sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நாடு கடத்துவதில் 'அதீத ஆர்வம்': புது மசோதா போடுகிறது அமெரிக்கா

/

நாடு கடத்துவதில் 'அதீத ஆர்வம்': புது மசோதா போடுகிறது அமெரிக்கா

நாடு கடத்துவதில் 'அதீத ஆர்வம்': புது மசோதா போடுகிறது அமெரிக்கா

நாடு கடத்துவதில் 'அதீத ஆர்வம்': புது மசோதா போடுகிறது அமெரிக்கா


ADDED : ஆக 26, 2025 06:56 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பல ஆண்டுக்கு முன் வழக்கு பதியப்பட்டிருந்தாலும், அதன் அடிப் படையில், நாடு கடத்தும் வகையில், புதிய மசோதா அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில், புதிய மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது சட்டமானால், ஒரு நபர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை ஆண்டுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் மது அருந்தியதை ஒத்துக் கொண்டிருந்தாலும், அதனடிப்படையில் அவரை நாடு கடத்த முடியும்.

இ து, கிரீன் கார்டு எனப்படும் குடியிருப்பதற்கான நிரந்தர உரிமை பெற்றவர்கள் மற்றும் கல்வி, தொழில் என பல்வேறு விசா வைத்திருப்பவர்களை நாடு கடத்துவதற்கும், அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வர அனுமதிப்பதை தடுக்கவும் வழி வகுக் கிறது.

கடந்த, 2018 முதல் 2023 வரை 43,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த மசோதா புலம் பெயர்ந்தவர்களையும், படிப்பு, வேலை தேடி சென்றிருப்பவர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களே கல்வி கற்க சென்றுள்ளனர். இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்டு பெறும் தனிநபர்களில் இந்தியர்களே மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர்.

எந் தவித விசாரணை, எச்சரிக்கை, வாய்ப்பு இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுத்து நாடு கடத்துவதற்கான சட்டத்தை கொண்டு வரும் அமெரிக்க அரசின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us