sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து

/

அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து

அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து

அடுத்தடுத்து 3 முறை எரிமலை வெடிப்பு இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து


ADDED : மார் 22, 2025 07:38 AM

Google News

ADDED : மார் 22, 2025 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகர்தா : இந்தோனேஷியாவில் லெவோடோபி லகி லகி மலையில் அடுத்தடுத்து மூன்று முறை எரிமலை குழம்பு வெடித்து சிதறியதால் மக்கள் பீதியடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தென் மத்திய பகுதியில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் அமைந்துள்ளது புளோரஸ் தீவு. இந்த மாகாணத்தில் கடந்த ஏழு நாட்களாக நுாற்றுக்கணக்கான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், எரிமலை வெடிப்புக்கான அறிகுறிகளும் தெரிந்தன. இந்த நிலையில் நேற்று திடீரென எரிமலை வெடித்து சிதறியது.

தொடர்ந்து நேற்று வரை அடுத்தடுத்து மூன்று முறை எரிமலை வெடித்ததால் மக்கள் பீதியடைந்தனர். அப்போது சாம்பல் படலம் 26,000 அடி உயரத்துக்கு உமிழப்பட்டது.

எரிமலை வெடிப்பையொட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலிதீவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மற்ற உள்ளூர், சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த எரிமலையில் இருந்து லாவா நெருப்பு குழம்பு வெளியேறும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us