sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

துபாயை மீண்டும் மிரட்டும் கனமழை

/

துபாயை மீண்டும் மிரட்டும் கனமழை

துபாயை மீண்டும் மிரட்டும் கனமழை

துபாயை மீண்டும் மிரட்டும் கனமழை

4


ADDED : மே 02, 2024 03:35 PM

Google News

ADDED : மே 02, 2024 03:35 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது துபாயில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளின் தலைநகர் துபாயில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற நகரங்கள் மூழ்கின. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த வெள்ளப்பாதிப்பில் இருந்து ஓரளவு மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் துபாயில் கனமழை பெய்தது.

துபாயில் நேற்றிரவு (மே 1) புயல் காரணமாக மிதமான மழையாக பெய்த நிலையில், காலை முதல் கனமழையாக மாறி கொட்டித்தீர்த்தது. இதனால் சர்வதேச விமான நிலையமான துபாய்க்கு வந்து செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் துபாய்க்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர். மாறிவரும் பருவநிலை காரணமாக மழை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us