ADDED : ஜன 02, 2024 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.
லாகூர் தொகுதியில் போட்டியிட, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில், 'இம்ரான் கான் சிறை தண்டனை மட்டுமே ரத்து செய்யப்பட்டது. குற்றவாளியாக இம்ரான் தொடர்வதால், அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது' என, தெரிவித்துள்ளார்.

