ஊழல் குற்றச்சாட்டில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை!
ஊழல் குற்றச்சாட்டில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை!
UPDATED : ஜன 28, 2026 05:19 PM
ADDED : ஜன 28, 2026 05:07 PM

சியோல்: ஊழல் குற்றச்சாட்டில்,தென்கொரியாவின் முன்னாள் அதிபர் மனைவி கிம் கியோன்-ஹீ, 20 மாத சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
தென்கொரியா முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல், கடந்த 2024 டிசம்பரில், நாட்டில் திடீரென ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றார். அது தோல்வியில் முடிந்த காரணத்தால் கடந்த 2025 ஆம் ஆண்டில் அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மேலும் அவர் மீது ராணுவ சட்டத்தை அமல்படுத்தி பார்லிமென்டை முடக்க முயன்ற நிலையில் தேசத்துரோக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், யூன் சுக்-இயோல் மனைவி கிம் கியோன்-ஹீ ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாத சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
தென்கொரிய வரலாற்றில் முன்னாள் அதிபரும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் சிறையில் இருப்பது இதுவே முதல்முறை.

